திருச்சி.! மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் வரகனேரி பெரியார் நகரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மனைவி முத்துமணி(35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மணிவண்ணன் மதுவிற்கு அடிமையாகி தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மணிவண்ணன் மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை பார்த்த அவரது மனைவி முத்துமணி மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முத்துமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Women Commits suicide by hanging in Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->