இதில் எது உண்மை? பேரவை நேரலையை திறாணியற்ற திமுக அரசு துண்டித்திருக்கிறது - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMk MK Stalin govt assembly live
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "வழக்கம்போல் பேரவை நேரலையை துண்டித்திருக்கிறது திறாணியற்ற திமுக அரசு. பெருகிவரும் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை, ஸ்டாலின் அரசை அவ்வளவு தூரம் மிரள வைத்திருக்கிறது.
ஆளுநரை அவமானப்படுத்துவதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் அரசியல் செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றி விடலாம் என நினைக்கும் திமுக அரசு, தமிழ்நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சனைகளான பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், தலித்களுக்கு எதிரான அட்டூழியங்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தங்கள் அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும்படி ஆளுநர் உரையின் மூலமாக அவரை நிர்பந்தித்திருப்பது எத்தகைய போலித்தனம்...
நேரலையை வேண்டுமானால் இந்த ஆட்சியாளர்கள் துண்டிக்க முடியுமே தவிர, அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றுள்ள இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் அலையை இவர்கள் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், ஆளுநர் பேச முயன்ற போது அவரது மைக் ஆஃப் செய்யப்படவில்லை.
மைக் அணைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்கிறார் அமைச்சர் ரகுபதி.
ஆனால், பேரவையில் சபாநாயகர் பேச எழுந்தால் மற்றவர்கள் மைக் ஆஃப் செய்யப்படும் என்கிறார் சபாநாயகர் அப்பாவு.
இதில் எது உண்மை?
சட்டபேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்திருந்தால் இந்த குழப்பம் எதற்கு ஸ்டாலின் சார்! என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMk MK Stalin govt assembly live