உரசிய தீக்குச்சிகள்... பற்றி எரிந்த வீடு... பெண்ணுக்கு நேர்ந்த கதி.. வேலூரில் சோகம்...! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் தீக்குச்சிகள் உரசியதில் வீடு தீப்பிடித்து எரிந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஊசூராம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகையன் (60). இவர் வீட்டில் குடிசை தொழிலாக தீப்பொட்டிகள் செய்து வருகிறார். இவரது தங்கை சுகுணா (56). இந்நிலையில் முருகையன் இன்று காலை தங்கை சுகுணாவுடன் மருந்துகள் பொருத்திய தீக்குச்சிகளை சாக்கு பைகில் கொட்டியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகையன் மற்றும் சுகுணா தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயானது வீடு முழுவதும் பரவியதால் இரண்டு பேரும் தீயில் சிக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த தீக்காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகுணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே, இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman died when house caught fire due to matches in Vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->