தர்மபுரியில் பயங்கரம்.! கணவரை கொடூரமாக அடித்துக்கொன்ற மனைவி...! போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் கொடூரமாக கணவரை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(43). இவரது மனைவி மாதம்மாள். இந்நிலையில் கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்றும் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மாதம்மாள், கணவரை அடுப்பு பற்ற வைத்த பயன்படுத்தப்படும் ஊது குழலால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதையடுத்து மாதம்மாள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கணவனை அடித்துக்கொன்று விட்டு தப்பி ஓடிய மாதம்மாளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A wife who beat her husband to murder in dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->