உல்லாசமாக இருந்த வீடியோ..மாணவியை மிரட்டிய உதவி பேராசிரியர் கைது!
A video that was sensational Assistant professor arrested for threatening a student
மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு முதுநிலை வேளாண் படிப்பு படித்து வந்தார்,நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய மாணவி ஒருவர்.அப்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயதான சிதம்பரம் விபீஷ்ணபுரம் சாரதாராம் நகரை சேர்ந்த ராஜா என்பவர், அந்த மாணவியுடன்பழக்கம் ஏற்பட்டு பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டடுள்ளனர் , அப்போது பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டட அந்த நேரத்தில் அதை ராஜா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்தவீடியோவை வைத்து அந்த மாணவியை மீண்டும் தனது இச்சைக்கு வருமாறு அழைத்துள்ளார்,அதுமட்டுமல்லாமல் தற்போது அந்த வீடியோவை வைத்து அந்த மாணவியை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A video that was sensational Assistant professor arrested for threatening a student