'2030 காமன்வெல்த் போட்டிகள்': இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமை கோருவதற்கான முன்மொழிவை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முன்மொழிந்தது. இந்த உரிமை கோரலுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்க, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை நடத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் குஜராத் அரசு நிதி உதவி வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆமதாபாத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. அத்துடன், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானமும் அமைந்துள்ளது.

இதற்கிடையே, அண்மையில் காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் ஆமதாபாத்தில் ஆய்வு செய்துள்ளதோடு, குஜராத் அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Cabinet approves hosting of 2030 Commonwealth Games in India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->