திண்டுக்கல்லில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி பகுதியை சேர்ந்தவர் வியாபாரி மணிகண்டன் (31). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று மாலை குடிநீருக்காக மோட்டர் இயக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person killed electrocuted in Dindigul


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->