பெரம்பலூர் அருகே பரிதாபம்..! மொபட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(49). இவர் அடைக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர்-துறையூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென பாலசுப்பிரமணியன் மொபட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார்.

இதைப் பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து பாலசுப்பிரமணியன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பாலசுப்பிரமணியன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A farmer who fell from a moped was killed in Perambalur near


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->