திருநெல்வேலி அருகே இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக் கொலை.! மர்மநபர்களின் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மர்ம நபர்களால் இறைச்சிக்கடைக்காரர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பாண்டியாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவர் அதே பகுதியில் இறைசிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் இறைச்சி கடையில் இருந்த ஆறுமுகத்தை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறுமுகம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த முக்கூடல் போலீசார் ஆறுமுகத்தை வெட்டி கொன்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A butcher shopkeeper was hacked to murder near Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->