சென்னையில் பரிதாபம்.! காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன்... 2-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னையில் காற்றாடி பிடிக்கச் சென்ற சிறுவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா (13) நேற்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது திடீரென பறந்து வந்த காத்தாடியை பிடிப்பதற்காக பிரசன்னாவும் அவரது நண்பர்களும் ஓடி உள்ளனர்.

அப்பொழுது இரண்டாவது மாடியில் ஏறி சென்று காத்தாடியை பிடிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக திடீரென பிரசன்னா இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து பலத்த காயமடைந்த பிரசன்னாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில் பெற்றோர் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தன. இதைத்தொடர்ந்து பிரசன்னாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மேலும் பிரசன்னாவின் தந்தை, குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் இது போன்ற இறப்புகளை தவிர்க்க முடியும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A boy who was going to catch a kite fell from the floor and died in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->