அடப்பாவி! 95 வயது மூதாட்டி கொலை...! செருப்பால் சிக்கிய கொலையாளி...!
95 year old woman murdered Killer caught with a slipper
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 1-வது வார்டு கருக்குப்பட்டி பகுதியில் 95 வயதான ராஜம்மாள் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் ராஜம்மாள் மற்றும் அவருக்கு உதவியாக அவரது மகள் 'பழனியம்மாள்' கடந்த சில வருடங்களாக உடனிருந்து வந்தார்.இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மூதாட்டி ராஜம்மாள் தனது பேரன்-பேத்திகள், உறவினர்களுடன் இருந்துவிட்டு மாலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் தனது வீட்டிலுள்ள கட்டிலில் ராஜம்மாள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து மகள் பழனியம்மாள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.மூதாட்டி இறந்த செய்தி அறிந்து உறவினர்கள் வீட்டிற்கு திரண்டனர். ராஜம்மாளின் மகன் வழி பேரன்களான சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன் ஆகியோர் மூதாட்டியின் தலையில் 2 இடங்களில் பலத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, தாரமங்கலம் கவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உறவினர்கள் மூதாட்டி உடலை அடக்கம் செய்யும் வேலையில் தீவிரம் காட்டினர்.இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான காவலர்கள், அடக்கம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்தி ராஜம்மாளின் உடலை கைப்பற்றிஅவசர ஊர்தி மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் ஓமலூர் துணை காவல் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.மேலும், மூதாட்டி ராஜம்மாள் தவறி விழுந்து தானாக இறந்தாரா? அல்லது சொத்துக்காக யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜம்மாளை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் குடிபோதையில் சம்பவத்தன்று ராஜம்மாள் வீட்டிற்கு சென்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதை கண்ட ராஜம்மாள் செல்லதுரையை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை தோசை கரண்டியால் ராஜம்மாளின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு ரத்த கரைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சென்றுள்ளார். பின்னர் தனது செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றதால் காவலர்களின் பிடியில் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் காவலர்களுக்கு முக்கிய தடயமாக கொலையாளியின் செருப்பு இருந்தது. இந்த செருப்பை வைத்து காவலர்கள் துப்பு துலக்கி கொலையாளியை எளிதாக கண்டுபிடித்தனர்.இதைத்தொடர்ந்து செல்லான் என்கிற செல்லதுரையை கைது செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
95 year old woman murdered Killer caught with a slipper