900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை - அதிரவைத்த அண்ணா பல்கலை.! - Seithipunal
Seithipunal


கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று தெரிவித்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி, பேராசிரியர்கள் விவரங்களை பார்த்து அதில் போலியாக, முறைகேடாக சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

900 professors life ban in tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->