நெல்லை: 8-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை.! அதிர்ச்சியில் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே ஜெயஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா (13) பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரிக்ஷயா இருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்பொழுது ஸ்ரீரிக்ஷயா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், ஸ்ரீரிக்ஷயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th class girl commits suicide in tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->