உறவினர் வீட்டிற்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவன்... மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற 8ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கொடியாளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சந்தோஷ்(14), 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ், உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு குளிசாதன பெட்டியை சந்தோஷ் திறந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8th class boy killed by electrocution in kirishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->