சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. உறவினருக்கு ஜெயில்... செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்தவர் தயாளன் (54). இவர் கடந்த 2009ஆம் ஆண்டு உறவுக்கார 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தயாளனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 years prison for relative who sexually harassing a 11 year old girl in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->