சென்னையில் போலீசார் அதிரடி நடவடிக்கை.. ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடியில் ஒரே நாளில் கொலை கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டுள்ள 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் நேற்று அதிகாலை முதல் ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி கொலை கஞ்சா மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 28 பேர், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் 11 பேர், கஞ்சா வழக்கில் ஒருவர் மற்றும் இதர வழக்கு உள்ளிட்ட மொத்தம் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 rowdys arrested in Chennai avadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->