சீர்காழி அருகே பயங்கர விபத்து - நடத்துனர் உட்பட 4 பேர் பலி, 26 பேர் காயம் - Seithipunal
Seithipunal


சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சீர்காழி புறவழி சாலை பாதரக்குடி பகுதி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த குரூட் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மோதியது. 

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அரசு சொகுசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் பேருந்து நடத்துனர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 26 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 killed and 26 injured in Terrible accident near Sirkazhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->