#நீலகிரி:: ஆசிரியர்களால் வந்த வினை.. கணித பாடத்தில் அனைவரும் தோல்வி.. ஷாக்கான 34 மாணவர்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரைமணி நேரம் நேரம் தாமதமாக அமைச்சர் அன்பில் மகேஷ் வந்ததால் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இந்த முறை தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03%, அதன்படி தேர்வெழுதிய 8,03,385 பேரில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளை விட மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களில் 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணம் சாம்ராஜ் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தேர்வு மையத்தில் மார்ச் 27ம் தேதி நடைபெற்ற கணித பாட தேர்வின் பொழுது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு விடைகளை சொல்லி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது உண்மை என தெரியவந்தது.

இதனையடுத்து 5 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வியாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், ஆசிரியர் சொல்லி கொடுத்து தேர்வு எழுதியதாக சொல்லப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவலையம் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் முடிவு நிறுத்திவைக்கப்பட்ட 34 மாணவர்களும் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளதால்  மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

34 students results were withheld failed in Mathematics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->