புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகளை அடக்கிய 300 வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையில் சித்தி விநாயகர் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போட்டியை காலை 09 மணிக்கு அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  ஆர்டிஓ ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் களமிறங்கினர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

300 players tamed 750 bulls in the Jallikattu competition near Pudukkottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->