பெரம்பலூரில் சோகம் | குழியில் தேங்கிய நீரில் மூழ்கி 3 வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் குழிக்குள் தேங்கிய நீரில் மூழ்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மாவிலிங்கை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ரோகித் சர்மா (3) நேற்று தனது பாட்டி தங்கம் ஆளுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உள்ளான். பின்பு அப்பகுதியில் விளையாட சென்ற சிறுவன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்துள்ளான்.

மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால் அந்தக் குழு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்ததால், குழிக்குள் தவறி விழுந்த ரோகித் சர்மா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து விளையாட சென்ற பேரனை காணாமல் அப்பகுதியில் தங்கம்மாள் தேடியுள்ளார். அப்பொழுது பேரன் குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் ரோகித் சர்மாவின் உடலை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரோஹித் சர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 year old boy drowned in stagnant water in a pit in Perambalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->