நாமக்கல்லில் அதிர்ச்சி.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் திடீர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தச்சுத்தொழிலாளி நடேசன்(65). இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகளும், ஒரு மகனும் இறந்து விட்டனர். 

இந்நிலையில் தச்சு தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் நடேசன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். மேலும் இவருக்கும், மகன் நந்தகுமாருக்கும்(35) சர்க்கரை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நடேசனுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த நடேசன், நோய் பாதிப்பு மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, இதுகுறித்து மனைவி மற்றும் மகன் நந்தகுமாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து குடும்பமாக நடேசன், அவரது மனைவி மற்றும் மகன் நந்தகுமார் ஆகிய மூன்று பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டின் உள்ளே பார்த்துள்ளனர்.

அப்பொழுது நடேசன், மனைவி சிந்தாமணி, மகன் நந்தகுமார் ஆகிய மூன்று வரும் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 members of the same family committed suicide in namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->