சிறுமியை மிரட்டி பலாத்காரம்.! தொழிலாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறை.! நீதிமன்றம் அதிரடி..!
26 years prison for worker who raping a girl in Tiruppur
திருப்பூரில் 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூரை சேர்ந்தவர் பாண்டியன் (30). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை ஆபாசமாக படம் பிடித்த பாண்டியன், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை கைது செய்தனர். இதையடுத்து இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாண்டியனுக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து பாண்டியன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
26 years prison for worker who raping a girl in Tiruppur