#ஈரோடு | தேனீக்கள் கொட்டி 26 பெண் தொழிலாளர்கள் காயம்...!
26 women workers injured in bee sting in erode
ஈரோடு மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் 26 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னகரடு பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்காக 26 பெண் தொழிலாளர்கள் நேற்று மினி வேனில் வந்தனர். இதையடுத்து பெண்கள் அனைவரும் மினி வேனில் இருந்து கீழே இறங்கியதும், அப்பகுதியில் இருந்த தேனீக்கள் அனைவரையும் கொட்டத் தொடங்கியுள்ளது.
இதனால் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும் 26 பெண்களும் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று, அனைவரும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைவது தொடர்கதையாகி வருகிறது.
English Summary
26 women workers injured in bee sting in erode