கிருஷ்ணகிரி || 5000 கடன் வாங்கச் சென்ற இளைஞர்களுக்கு 20000 அபராதம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி || 5000 கடன் வாங்கச் சென்ற இளைஞர்களுக்கு 20000 அபராதம் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்துள்ளது. ஆனால், காரில் இருந்த நபர்கள் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். 

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் காரை துரத்திச் சென்று காரில் இருந்தவர்களை பிடித்து சரமாரியாக அடித்த உதைத்தனர். பின்னர், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "அந்த நபர்கள் மது போதையில் உறவினர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவதற்காக காரை வேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

கடன் வாங்க சென்ற வாலிபர்கள் மது போதையில் கார் ஓட்டிச் சென்று இருபது ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிய சம்பவம் போச்சம்பள்ளியில் சிரிப்பலையை ஏற்படுத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 thousand fined to youths for drunk and drive in krishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->