கல்குவாரியில் கிடந்த பள்ளி மாணவன் உடல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் இயேசுபாதம் மகன் எடிசன். சோமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனால், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த எடிசன் நேற்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் இன்று சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு கல்குவாரி பகுதியில் இருசக்கர வாகனம், செருப்புகள் கிடப்பது அந்த பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எடிசனின் பெற்றோர், உறவினர்கள் சோமங்கலம் அருகே உள்ள கல்குவாரி பகுதிக்கு விரைந்து வந்தனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி எடிசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student body rescue in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->