சிறுமியை கடத்தி பலாத்காரம்... கட்டிட தொழிலாளிக்கு சிறை தண்டனை... ஈரோடு நீதிமன்றம் அதிரடி..!
20 years prison for the worker who raped a girl in erode
ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கூகலூர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குமார் (26). இவரது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குமார் வேலை பார்த்து வரும் கட்டிட ஒப்பந்ததாரரின் 13 வயது மகளுடன் குமார் பழகி வந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியை காணவில்லை என்று மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குமார் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 8000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
20 years prison for the worker who raped a girl in erode