#ஈரோடு : 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.! தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை.! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீராசாமி (51). இவர் 4 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீராசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீராசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் வைத்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 years in prison for a worker who sexually harassing a 4 year old girl in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->