சிறுமிக்கு பாலியல் தொல்லை..! அண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை.! தஞ்சை போக்சோ கோர்ட்டு உத்தரவு - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் அண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஆனந்தராஜ்(27), உறவினரான தங்கை முறையான 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி ஆனந்தராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தராஜ், சிறுமியை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தாயார் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை ஆனந்தராஜ் அழைத்துச் சென்றதும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தங்கை முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்தராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years imprisonment for the brother who sexually harassed the girl in Thanjavur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->