பானிப்பூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பலி..!
2 years old baby Death
கொதிக்கும் பானிபூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி அனுஷியா என்ற மனைவியும் ரிஷி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. முருகேசன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி அனுசுயா வீட்டு வாசலில் சிறிய அளவில் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இருபத்தி ஏழாம் தேதி பானி பூரி குருமா தயார் செய்து பாத்திரத்தை கீழே வைத்த போது குழந்தையின் ஈசி எதிர்பாராதவிதமாக அந்த பாத்திரத்தில் தவறிவிழுந்து படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவனையில் கொண்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பானி பூரி குருமா பாத்திரத்தில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது