மதுரை அருகே பரிதாபம்.! கல்குவாரியில் மூழ்கி அக்கா-தங்கை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வி.எஸ் குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள்கள் விஜயலட்சுமி (48), பூங்கொடி (45). இவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் சமையல் வேலைக்கு செல்வார்கள். இதில் விஜயலட்சுமிக்கு திருமணமாகவில்லை. மேலும் பூங்கொடிக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி பகுதிக்கு சமையல் வேலைக்காக சென்றுள்ளனர்.

இதையடுத்து இருவரும் நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஒருவர் திடீரென ஆழமான பகுதிக்குள் சென்றதால், அவரை மற்றொருவர் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இரண்டு பேரும் நீரில் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வெகு நேரமாகியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கப்பட்டு விஜயலட்சுமி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரின் உடல்களை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 sisters drowning in Calquary in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->