சாலையோர தடுப்பில் மோதிய கார்.. பரிதாபமாக பலியான இருவர்..! - Seithipunal
Seithipunal


சாலையோர தடுப்பில் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது நண்பர்களான ஏழுமலை, கவியரசு , சுரேஷ்,  காமராஜ் மற்றும் செல்வகுமார் உள்ளிட்ட 7 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா முடித்து விட்டு சென்னை நோக்கி தனது காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்ற 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே படுகாயமடைந்த ஏழுமலை பெரிதாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons death in Accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->