பொது இடத்தில் மது குடித்த வாலிபர்.! தட்டிக்கேட்ட 2 பேருக்கு கத்திக்குத்து.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வெரைட்டிஹால் தோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை கண்டித்தனர். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு பேரையும் குத்தி, மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காயமடைந்த இரண்டு பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், இருவரையும் கத்தியால் குத்தியது கோவை தெற்கு உக்கடம் அல் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்த தொழிலாளி ரிஸ்வான் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 people were stabbed for drinking alcohol in a public place in kovai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->