த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் 'நாமக்கல் டாக்டர்' உள்பட மேலும் 2 பேர் அதிரடி கைது...!
2 more people including Namakkal Doctor arrested Tvk coup plot case
த.வெ.க. அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வழக்கின் விசாரணை ஒவ்வொரு நாளும் புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மருத்துவர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணை, செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகியோர் முக்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூருவில் இருந்த இருவரையும் தனிப்படை காவலர்கள் மடக்கிப் பிடித்து சென்னை அழைத்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாமக்கல்லில் இருந்த மற்றொரு மருத்துவர் மற்றும் மேலும் ஒருவரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
தற்போது இந்த நால்வரிடமும் சதித்திட்டத்தின் பின்னணி, பணப் பரிவர்த்தனைகள், தொடர்பில் இருந்த முக்கிய நபர்கள் மற்றும் சதியில் அவர்களின் பங்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகியோர் இந்த வழக்கில் முறையாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு மருத்துவர் உள்ளிட்ட மேலும் 2 பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தனிப்படை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதானவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் எங்கிருந்து பெறப்பட்டது, எதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டது, வழக்குடன் அதற்கு உள்ள தொடர்பு என்ன என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
2 more people including Namakkal Doctor arrested Tvk coup plot case