அனுமதியின்றி செயல்படும் 162 தனியார் பள்ளிகள்... ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
162 private schools operating without permission in TN
தமிழகத்தில் சர்வதேச பள்ளிகள், பன்னாட்டு பள்ளிகள் என பல வகையான பெயர்களில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சேகரித்தது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 162 பள்ளிகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனராக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசின் அனுமதி இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்குவதாகவும், ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுவிட்டு அதை பெயரில் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 162 பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், தனியார் பள்ளியில் இந்த முறைகேடு குறித்து கல்வித்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
162 private schools operating without permission in TN