மாணவர்கள் கவனத்திற்கு.. 12ம் மதிப்பெண் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!
12th public exam marks revaluation apply from today
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தேர்வை எழுதிய சுமார் 8.50 லட்சம் மாணவ-மாணவியர்களில், 7,55,451 (94.03%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்கள் அல்லது படித்த பள்ளியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 எனவும், மறு கூட்டலுக்கான உயிரியல் பாடத்திற்கு 350 ரூபாயும், மற்ற படங்களுக்கு 205 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
12th public exam marks revaluation apply from today