பிளஸ்-2 தேர்வில் தோல்வி... காதலன் தற்கொலை... சோகத்தில் பிளஸ்-1 மாணவி விபரீத முடிவு..!
11th class girl commits suicide in tiruvallur
பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டதால், வேதனையில் காதலி பிளஸ் 1 மாணவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் டில்லி. இவரது மகள் நந்தினி (16), 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஆவடி பகுதியை சேர்ந்த தேவா (17) என்ற 12ஆம் வகுப்பு மாணவனை நந்தினி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேவா தோல்வியடைந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையறிந்த நந்தினி, காதலன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
11th class girl commits suicide in tiruvallur