கொந்தளித்த திமுக! தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்த மத்திய அரசு!
100 days work TN Govt Central Govt
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்டு, 2006 ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயல்படுத்தப்பட்டது.
ஊரக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தனிப்பட்ட வேலை உறுதி அட்டை வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் நிலையான வருமான வாய்ப்புகள் உருவாகும்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தாமதமாக்கியது. இதற்கெதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்து, வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. இதனையடுத்து மாநிலம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
தற்போது, அந்த நிலுவைத் தொகையிலிருந்து ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இருப்பினும், முழுத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளதால், நிதி வழங்கல் மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
100 days work TN Govt Central Govt