போலீசார் ரோந்து பணியில் சிக்கிய 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் 10 கிலோ கஞ்சா சிக்கியது.இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த  மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோவில்பட்டி, கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி,  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்போது அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு கார்களில் இருந்தவர்களை சோதனை செய்தனர். 

அப்போது அதில் அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த சங்கிலிபாண்டி , தூத்துக்குடி P&T காலனியைச் சேர்ந்த மகாராஜா,கோவில்பட்டி கணேஷ்நகரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக  சங்கிலிபாண்டி, மகாராஜா, நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 kilograms of ganja caught by police on patrol2 cars seized 3 arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->