அரக்கோணத்தில் பள்ளி மாணவன் நெஞ்சு வலியால் திடீர் மரணம்! - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் விண்டர்பேட்டை எஸ். வி. நகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் ரோஹித். 16 வயாதான ரோஹித், அரக்கோணத்தில் உள்ள  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 

இந்நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் ரோஹித்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரோஹித் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் ரோஹித்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஹித் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 1 படித்து வந்த மாணவன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

+1 student in Arakonam died suddenly due to chest pain!


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->