திருத்துறைப்பூண்டியில் அரசுப் பேருந்து சாலை தடுப்பு மீது மோதி விபத்து: தீவிர சிகிச்சையில் 05 பேர்..!
05 people injured in accident on government bus roadblock in Thiruthuraipoondi
திருத்துறைப்பூண்டி அரசு பேருந்து ஒன்று சாலையில் உள்ள செண்டர் மீடியனில் மோதியதில் 05 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 25 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுள்ளது. குறித்த பேருந்து திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள செண்டர் மீடியம் பகுதியில் வந்த போது பேருந்து நிலை தடுமாறியுள்ளது. அப்போது நேரடியாக செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 05 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு பேருந்து செண்டர் மீடியனில் மோதிய போது அங்கிருந்த பொது மக்கள் நேரடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
05 people injured in accident on government bus roadblock in Thiruthuraipoondi