#BigBreaking | மரண ஆட்டம்., கொல்கத்தாவை கதறவிட்ட அஸ்வின்.! டக் அவுட் ஆன தமிழக வீரர்.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் டி20 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று இறுதிப் போட்டியில் நுழைவதற்கான இரண்டாவது ஆட்டம் ஷார்ஜாவில் நடந்து முடிந்துள்ளது. இதில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன. 

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்ட பட்டதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் அதிரடி மன்னன் பிரித்வி ஷா எடுத்ததும் தனது அதிரடி ஆட்டத்தை எப்போதும் போல வெளிப்படுத்திய போதிலும், வருண் சக்கரவர்த்தியின் நேர்த்தியான பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். (12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள்)

முதல் விக்கெட் விழுந்ததும் டெல்லி அணியின் அதிரடி ஆட்டம் காணாமல் போனது, ஷிகர் தவான் - ஸ்டோனிக்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கியது போல் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, இவ்வளவு ஒரு முக்கியமான ஆட்டத்தில் இவ்வளவு நிதானம் தேவையா என்று டெல்லி அணி ரசிகர்கள் கதறிக்கொண்டு இருந்தனர். 

மிதமான வேகத்தில் டெல்லி அணியின் ரன் உயர தொடங்க. 12 வது ஓவரின் 3 பந்தில் ஸ்டோனிக்ஸ் (23 பந்துக்கு 18 ரன்கள்) ஒரு வழியாக தனது விக்கெட்டை பறிகொடுக்க, தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 36 ரங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்களை சேர்த்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 135 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிரடியாக அமைந்தது. 

தொடக்க ஆட்டக்காரரான வெங்கடேஷ் ஐயர் அசத்தாலான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதம் கண்டு,  41 பந்துகளில், 55 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் ஐயர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 11 ரன்னுக்கு ஆட்டமிழக்க, நன்றக ஆடிகொண்டு இருந்த சுப்மான் கில்லும் (46 பந்துகளில், 46 ரன்கள்) தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஆகா இது என்னடா புது டிவிடஸ்தா இருக்கே என்று நினைக்கும் போதே, கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் அவுட் ஆகி கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

ஆட்டத்தின் கடைசி ஓவரை அஷ்வின் வீச, 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் பந்தில் ராகுல் திரிபாதி ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் சாகிப் அல் ஹாசன் ரன் எடுக்காமல் போக, 4 பந்துகளில் ௬ ரன்கள் தேவைபட்டது.

கடைசி ஓவரின் 3 வது பந்தில் சாகிப் அல் ஹாசன் அவுட் ஆக, ஆட்டம் தலைக்கீழாய் மாறியது. மேலும், அடுத்து களமிறங்கிய சுனில் நரேன் களமிறங்கியுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டு பந்துகளை 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராகுல் திரிபாதி  ஒரு சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிபெற செய்தார்.

கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 136 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு நுழைந்தது. நாளை மறுநாள் நடக்க உள்ள இறுதி போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தாதா அணியும் மொத உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIVOIPL Qualifier2 KKRvDC KKR WIN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->