விதியை மீறிய ஆர்சிபி அணியின் கேப்டன்: ரூ. 24 லட்சம் அபராதம்..! - Seithipunal
Seithipunal


லக்னோவில் நடந்த போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி சகல விக்கெட்டுகளை இழந்து வெறும் 189 ரன்களை மட்டும் பெற, 42 ரன்னில் லக்னோ அணி அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியது. இதற்கு முன்னர், மும்பை அணிக்கு எதிராக இதுபோல பந்து வீச தாமதம் செய்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதருக்கு (ரூ. 12 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக விதி மீறி தாமதமாகபந்து வீசியதால் ரஜத் படிதருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சக அணி வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ. 06 லட்சம் அல்லது சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதே போட்டியில் ஐதராபாத் அணியும் தாமதமாக பந்து வீசியது. ஆனால்,ம் இது முதன் முறை என்பதால், கேப்டன் கம்மின்சிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB captain fined Rs 24 lakhs for violating rules


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->