பெயரை மாற்றிய ஐபிஎல் அணி! பெயரை சுருக்கி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன் முடிந்த நிலையில் இந்த வருடம் 14 ஆவது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த சீசனுக்கு முன் அணியின் பெயரை மாற்றி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அறிவித்துள்ளது. இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி என அழைக்கப்படும் இந்த அணியானது இனி பஞ்சாப் கிங்ஸ் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த 13 வருடமாக விளையாடி வரும் பஞ்சாப் அணி ஒரே ஒருமுறை மட்டும் தான் இறுதி ஆட்டம் வரை சென்றது. மற்ற தொடர்களில் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டங்கள் அந்த அணிக்கு அமையவில்லை. சிறப்பான வீரர்கள் அணியில் இருந்தாலும் அந்த அணியால் சோபிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் 14வது சீசனுக்கான அந்த அணி கலந்து கொள்ளும் போது இதுவரை விளையாடிய பெயரிலிருந்து மாற்றி புதிய பெயரில் விளையாட முடிவு செய்தது. அதன்படி இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என அழைக்கப்பட்ட அணியானது இனிமேல் பஞ்சாப் கிங்ஸ் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL KXIP Team Name Changed Panjab Kings


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->