INDvsENG : காயம் காரணமாக விலகல்., அதிர்ச்சியில் தமிழக ரசிகர்கள்.!
INDvsENG
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணி, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்போது இங்கிலாந்திலேயே தங்கி உள்ளது.
அதே சமயத்தில், ஷிகர் தவான் தலைமையிலான ஒரு இந்திய அணி இலங்கை அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுடனான முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான பலம்வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் அடுத்த 6 வாரங்களுக்கு சிகிச்சையுடன் ஓய்வுஎடுக்க போகிறார். காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகி இருப்பது தமிழக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் மேட்சில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் பார்த்த யாராலும், அவரை மறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.