ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரர்களுக்கான விருது... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், தற்போது கடந்த 2019 ஆம் வருடத்திற்கான சிறந்த வீரர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடிய மற்றும் மனப்பாங்கை பாராட்டிய இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு " கிரிக்கெட் மன உறுதி " விருதானது அறிவிக்கப்ட்டுள்ளது. 

இதனைப்போன்று உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்கள் உற்சாகப்டுத்த சைகை செய்ததற்காக விருதும், கடந்த ஒரு வருட தடைக்கு பின்னர் களம் திரும்பிய ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்த போது கோலி சைகை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமல்லாது கடந்த 2019 ஆம் வருடத்தின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோலி தேர்வாகியுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோகித் சர்மாவிற்கு ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த வீரரான கேரி சோபர்ஸ் விருதிற்கு இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in icc announce 2019 best cricket player


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->