இனி இது போல் நடக்கக் கூடாது.!! விராட் கோலிக்கு BCCI எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் தகுதி பெறுவதற்கு அனைத்து வீரர்களுக்கும் யோ-யோ எனப்படும் உடல் தகுதி சோதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணி ஆசிய கோப்பை தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யோ-யோ சோதனையில் தகுதி பெற்று விட்டதாகவும், 17.2 மதிப்பெண்கள் பெற்று விட்டதாகவும் பகிர்ந்திருந்தார். இந்திய அணி வீரர்கள் யோ-யோ சோதனையின் போது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்களை பொதுவெளியில் பகிர அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தனது யோ-யோ மதிப்பெண்ணை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், தனது யோ-யோ மதிப்பெண்ணை பிற வீரர்களிடமும் பகிரக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI warns Virat Kohli for sharing Yo Yo score in public


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->