இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் ஆனார் ஷுப்மன் கில்! துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்! - Seithipunal
Seithipunal


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 25 வயதான இளைய வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் ஜூன் 20ல் ஹெட்டிங்லியில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதையும், விராட் கோலி அவரது ஓய்வை அறிவித்ததையும் தொடர்ந்து, கேப்டன் பதவிக்காக ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ஆனால், தேர்வர்கள் இன்று (மே 24) மும்பையில் கூட்டம் நடத்தி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஷுப்மன் கில்லுக்கு வழிகாட்டும் பொறுப்பை வழங்க முடிவு செய்தனர்.

மேலும், துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைடன்ஸ் அணியின் ஐபிஎல் கேப்டனாகவும், அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ந்து நம்பிக்கைக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மன் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 1893 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களும் அடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BCCI Team India Test Captain Gill


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->