மீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.! சோகத்தில் ரசிகர்கள்.!
ambati rayudu may disconnect with IPL2020
ஐபிஎல் 2020 தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆட்டத்தினால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர்.
அதுபோல நேற்று சென்னை அணி ராஜஸ்தான் ராயல் உடன் விளையாடி தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுக்கு பதிலாக நேற்று ருதுராஜ் கெய்க்வாட் விளையாடினார்.
ஆனால், அவர் முதல் பந்திலேயே டக் அவுட் செய்யப்பட்டார். அம்பத்தி ராயுடு அணியில் இடம்பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்றும் விரைவில் குணம் அடைந்தால், அடுத்த போட்டியிலேயே விளையாட தகுதி பெறுவார் என்றும் சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் கூறியுள்ளார்.
English Summary
ambati rayudu may disconnect with IPL2020