கடன் தொல்லை விரட்டுதா.?! இந்த கோவில் தான் உங்களுக்கு தீர்வு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழிபடும் நபர்களை கடவுள் கடன் பிரச்சனைகளில் இருந்து மீட்பதாக கூறப்படுகிறது தீவிரமான சிக்கல்கள் மற்றும் நீண்ட நாட்கள் இருந்து வந்த கடன் தொல்லைகள் உள்ளிட்டவற்றை தொலைக்க இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.

தேவார பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சிவனுக்குரிய தலங்களில் 95வது தலமாக இருப்பது இந்த கோவில் தான். சோழ மண்டல காவிரி ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் இந்த கோவில் அமைந்து இருக்கிறது.

இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் கடன் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் பூர்வ ஜென்ம கடன்களில் இருந்தும் நாம் விடை பெற முடியும். 

மேலும் பக்தர்கள் வாழ்வில் துயரம் ஒன்றே பாதையாகி இருக்கும் நிலையில் அவர்கள் இந்த தளத்திற்கு வந்து இறைவனை வழிபடுவதால் இன்னல்கள் நீங்கும். இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.எனவே, அந்த நாட்களில் கோவில் மிகவும் கூட்டமாக காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Kadan thollai Theervu temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->