பணம் ஈர்க்கும் மாலை..கடன் தீர்க்கும் சக்கரம்.!! தாமரை மணிமாலை.! - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் தாமரை மணிமாலை

பொருளாதார வளர்ச்சியில் ஒருவர் உச்சம் அடையும் போதுதான் அவரது குடும்பம் மற்றும் உறவுகளும் சமுதாயத்தில் முன்னேற்றம் அடையும்.

அந்த வகையில் பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக கருதப்படும் தாமரை மணிமாலையை பொருளாதார முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

தாமரை மணிமாலை இருக்கும் இடத்தை சுற்றிலும் நல்ல செயல்கள் மட்டுமே நடக்கும், தீய தடைகள் ஏதும் நிற்காது.

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணிமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைப்பதை போன்றதாகும்.

இயற்கையால் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சக்தி உண்டு. அந்த வகையில் இயற்கையால் படைக்கப்பட்ட தாமரை மணிமாலை ஒருவருக்கு ஏற்படும் தடைகளை போக்கி உயர்வான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது.

தாமரை மணிமாலையின் பயன்கள் :

பணத்தை ஈர்க்கும், கல்வி தடை, மந்தம், சுறுசுறுப்பு, ஞானம், தெய்வ அருள், குடும்ப பிரச்சனை, பிணக்குகள், ஒற்றுமை இல்லாமை, சகோதரர்கள் இடையேயான பிரச்சனை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற பலவற்றுக்கும் தீர்வாக அமைகிறது.

தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் தந்து பொருளாதார முன்னேற்றத்துடன் வாழ்வில் வெற்றிபெற செய்யும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thamarai Manimalai special


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->